நான் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவியை ஏற்கவில்லை: செல்வம் அடைக்கலநாதன்
தான் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவியை ஏற்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவராக ஜனாதிபதியால் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நியமிக்கப்பட்டிருந்தார்.
இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனிடம் கேட்ட போது மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவராக நியமிக்கப்பட்டதாக அறிந்தேன், ஆனாலும் நான் அதனை இதுவரை ஏற்கவில்லை என தெரிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவராக நியமனம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர்களுக்கான நியமனங்கள் நேற்று (24.02.2023) வழங்கப்பட்டிருந்தன.
மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவராக இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனும் அபிவிருத்திக் குழு இணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த பதவியானது அரச தரப்பு எம்.பிகள் மற்றும் அரச ஆதரவு தரப்பினர்
ஆகியோருக்கே வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல் - கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri

பிரித்தானியாவை நேரடியாக எச்சரிக்கும் அமெரிக்கா - லண்டனில் சூப்பர் தூதரகத்தை கட்டும் சீனா News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல்.... 200 கி.மீ நீள கால்வாய்: தண்டிக்க திட்டமிடும் இந்தியா News Lankasri

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri
