தென்னிலங்கையில் தந்தையின் மோசமான செயல்: ஆபத்தான நிலையில் மகன்
சூரியவெவ வெவேகம பிரதேசத்தில் தந்தையொருவர் துப்பாக்கியால் சுட்டதில் மகன் காயமடைந்து ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக சூரியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
சூரியவெவ, வெவேகம பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய தம்மாலகே இசுரு மதுஷங்க என்பவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.
கடந்த 11ஆம் திகதி 30 வயதுடைய மகனுக்கும் அவரது தந்தைக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு
மகன் வெவேகம தனது வீட்டிற்கு அருகில் உள்ள வயில் பகுதியில் குடிபோதையில் இருந்த நிலையில், அவ்விடத்திற்கு வந்த தந்தை, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மகன், பிரதேசவாசிகளால் சூரியவெவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய தந்தை தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் தங்காலை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் உத்தரவின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri
