தந்தை செல்வாவின் ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால் நாட்டில் யுத்தம் ஏற்பட்டிருக்காது : கோவிந்தன் கருணாகரம் (Photos)

Selva Gotabaya Rajapaksa Sri Lanka Economic Crisis Sri Lanka Sri Lanka Final War
By Kumar Apr 26, 2022 05:49 PM GMT
Report

இலங்கையில் தந்தை செல்வாவின் மூலம் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தால் இந்த நாட்டில் யுத்தமும் ஏற்பட்டிருக்காது, இன்றைய பொருளாதார நெருக்கடியும் ஏற்பட்டிருக்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பில் இன்று (26) இடம்பெற்ற தந்தை செல்வாவின் 45வது ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,

“தற்போது இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கும் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு மத்தியிலே நாங்கள் இன்றைய தினம் தந்தை செல்வா அவர்களை நினைவு கூர்ந்து கொண்டிருக்கின்றோம். இந்த நாடு சுதந்திரம் அடைந்ததில் இருந்து தமிழ் மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக அடக்கி ஒடுக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அந்த வகையிலே தமிழ் மக்களுக்கான தலைமையைக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தந்தை செல்வா அவர்கள் தமிழரசுக் கட்சியை உருவாக்கினார்.

இலங்கை மக்களுக்கு சமஸ்டி ஆட்சி முறையே வேண்டும் என்பதனைக் கருத்திற் கொண்டு இக்கட்சியை அவர் சமஸ்டிக் கட்சியாகவே உருவாக்கியிருந்தார்.

இருந்தும் தமிழ் மக்கள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என்று தான் விட்டு வந்த தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவரை அணுகி 27 வருடங்களின் பின்னர் ஜி.ஜி.பொன்னம்பலம் மற்றும் சௌமியமூர்த்தி தொண்டமான் அவர்களையும் இணைத்து தமிழர்களுக்குரிய தீர்வு தமிழ் ஈழம் தான் என வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை உருவாக்கியிருந்தார்.

அவரது ஒற்றுமை எண்ணம் தற்போது தமிழ் மக்களிடையே ஏற்பட வேண்டிய ஒரு நிலைமை இருக்கின்றது. அதே ஒற்றுமையின் நிமித்தம் 2001ம் ஆண்டு போராட்ட இயக்கங்கள், மிதவாதக் கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோற்றம் பெற்றது. அதே ஒற்றுமையுடன் 2004ம் ஆண்டுத் தேர்தலிலே 22 நாடாமன்ற உற்பினர்களைக் கொண்டிருந்த கட்சி 2009ற்குப் பின்பு சிதறுண்டு இருக்கின்றது.

தந்தை செல்வாவின் எண்ணம் தமிழ் தேசியப் பரப்பில் இருக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் வரவேண்டும். அனைவரும் ஒற்றுமையாகத் தமிழ் மக்களின் குரலாகப் பாடுபட வேண்டும். இன்று இலங்கை மக்கள் பொருளாதார ரீதியில் மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் இருக்கின்றார்கள்.

ராஜபக்ச சகோதரர்கள் அனைவரும் இந்த அரசை விட்டு வெளியேற வேண்டும், ஜனாதிபதி வெளியேற வேண்டும் என்ற கோசங்கள் சிங்கள இளைஞர்கள் மத்தியில் மிக வேகமாகப் பரவி வருகின்றது. இந்தப் பொருளாதார வீழ்ச்சி எவ்வாறு வந்தது என்பதை அனைவரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

தந்தை செல்வா அவர்கள் 1957ம் ஆண்டு பண்டாரநாயக்காவுடன் ஏற்படுத்திய ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் இந்த நாட்டில் ஒரு போர் மூண்டிருக்காது. அதனைத் தொடர்ந்து மாறி மாறி வந்த அரசாங்கங்கள் போருக்காக அதிகமான பணத்தைச் செலவழித்திருக்க மாட்டாது.

ஜே.ஆர்.ஜெயவர்த்தன அவர்கள் 1977ம் ஆண்டு ஜனாதிபதியாக வந்த பிற்பாடு போர் என்றால் போர், சமாதானம் என்றால் சமாதானம் எனக் கூறி மிகப் பெரிய போருக்கு வழிகொடுத்திருந்தார் அவரைத் தொட்டு வந்த ராஜபக்ச சகோதரர்கள் மிகவும் உக்கிரமான போரை நடத்தியிருந்தார்கள்.

அதற்கு பில்லியன் கணக்கில் நிதியினைப் பயன்படுத்தியமையே பொருளாதார நெருக்கடிக்கு முதல் முக்கிய காரணமாகும்.

அதற்கும் மேலாக 2005 தொடக்கம் 2015 வரையான மகிந்தவின் ஆட்சிக் காலத்திலே போருக்கு மேலதிகமாக மத்தள விமான நிலையம், ஹம்பாந்தோட்ட துறைமுகம், ராஜபக்ச விளையாட்டரங்கு, தாமரைத் தடாகம் போன்ற தேவையற்ற வருமானம் இல்லாத முதலீடுகளை கூடுதலான வட்டியில் கடன்களைப் பெற்று அதன் மூலம் அவர்களுக்குத் தரகுகளைப் பெற்று மேற்கொண்டதன் நிமித்தமும் இந்தப் பொருளாதாரப் பிரச்சினை இந்த அளவிற்கு அகோரமாக வந்திருக்கின்றது.

இவ்வாறான நிலைமைகளில் இருந்து மீள வேண்டுமாக இருந்தால், இந்த நாட்டில் மீண்டும் போர் ஏற்படாமல் பொருளாதார இழப்புகள் மேலும் அதிகரிக்காமல் இருக்க வேண்டுமானால் ராஜபக்ச சகோதரர்கள் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று போராடும் தற்போதைய தலைமுறையினர் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான ஒரு நிரந்தரத் தீர்வையும் ஏற்படுத்துவதற்குப் போராட முன்வர வேண்டும்.

இன்று ராஜபக்ச ஆட்சியில் இருந்து அதிருப்தியாளர்கள் பலர் வெளியேறியிருக்கின்றார்கள். இந்த அரசுக்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமும் கொண்டு வரப்பட இருக்கின்றது. நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றிபெற்று ஆட்சி மாற்றமொன்ற எற்படுமாக இருந்தால் இந்த நாட்டை ஆளப்போவது யார் என்பதை சிந்திக்க வேண்டும். நிறைவேற்று ஜனாதிபதி முறைமை இல்லாமலாக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்கு முழு அதிகாரமும் வந்தால் அந்த அதிகரம் முழுவதும் பிரதமருக்கு வரும்.

தற்போதைய நிலையிலே ராஜபகச் சகோதரர்களுடன் இருந்து அதிருப்தியில் வெளியேறிய உறுப்பினர்களில் இருந்து ஒருவர் பிரதமராக வந்தால் நிலை எவ்வாறு இருக்கும். தற்போது ஒரு கதை பரவுகின்றது.

இந்த அதிருப்தியாளர்கள் அனைவரும் சேர்ந்து விமல் வீரவன்சவிற்குப் பிரதமர் பதவியைக் கொடுப்பதற்குத் தீர்மானித்திருப்பதாகச் செய்திகள் வந்திருக்கின்றன.

விமல் வீரவன்ச எப்படிப்பட்டவர் என்பதை கடந்த கால அனுபவங்கள் நமக்குக் கூறும். விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் மிக மோசமாக இனத்துவேசம் பேசுபவர்கள். அவர்களிடம் ஆட்சி சென்றால் எண்ணெய்ச் சட்டிக்குள் இருந்து துள்ளி நெருப்புக்குள் விழுந்த நிலைமையாக எமது நிலை வரக்கூடாது.

இந்த நிலைமைகளில் தமிழ் மக்கள், தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாங்கள் என்ன செய்ய வேண்டும். தமிழ் மக்களின் நலன் சார்ந்து எப்படியான தீர்மானங்களை எடுக்க வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்” என்று தெரிவித்தார். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, ஸ்கந்தபுரம், யாழ்ப்பாணம், Scarborough, Canada

17 Jul, 2025
மரண அறிவித்தல்

Narantanai, நீர்கொழும்பு

17 Jul, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Paris, France

15 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ontario, Canada

16 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், Bromley, United Kingdom

15 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொக்குவில், Toronto, Canada

19 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland

15 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, வவுனியா

20 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆலங்குளாய், சங்கானை, யாழ்ப்பாணம், Dammam, Saudi Arabia, Rheine, Germany, Rushden, United Kingdom

29 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில், Watford, United Kingdom

20 Jun, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, Stains, France

22 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Markham, Canada

22 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Melbourne, Australia

14 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொண்டல்கட்டை, Brande, Denmark

17 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2008
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Frutigen, Switzerland

17 Jul, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய், கொழும்பு, சிட்னி, Australia

13 Jul, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Bremen, Germany

10 Jul, 2025
மரண அறிவித்தல்

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை, திருநெல்வேலி, யாழ்ப்பாணம், பம்பலப்பிட்டி

15 Jul, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

12 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

17 Jul, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், London, United Kingdom

09 Jul, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US