அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் பிணையில் விடுதலை
ஜனாதிபதி செயலகத்திற்குள் அனுமதியின்றி பிரவேசித்து சேதங்களை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்தில் சரணடைந்த அருட் தந்தை ஜீவந்த பீரிஸை 5 லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபரான அருட்தந்தை வெளிநாடு செல்ல தடைவிதித்த நீதிமன்றம், பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவில் நாளைய தினம் முன்னிலையாகி, வாக்குமூலம் ஒன்றை வழங்குமாறு பிணை நிபந்தனையும் விதித்துள்ளது.
ஜனாதிபதி செயலகத்திற்குள் புகுந்து சேதம் ஏற்படுத்திய சம்பவம்

சட்டவிரோதமாக ஒன்றுக்கூடி ஜனாதிபதி செயலகத்திற்குள் கடந்த ஜூலை 9 ஆம் திகதி பிரவேசித்து சேதங்களை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் சந்தேக நபராக சேர்க்கப்பட்டுள்ளதாக பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இதற்கு அமைய சட்டத்தரணி மூலமாக நீதிமன்றத்தில் சரணடைந்த அருட்தந்தை சம்பந்தமாக முன்வைக்கப்பட்ட விடயங்களை கவனத்தில் கொண்டு நீதிமன்றம் சந்தேக நபரை பிணையில் விடுவித்துள்ளது.

சந்தேக நபரான அருட்தந்தை சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அரசகுலரத்ன தலைமையிலான சட்டத்தரணிகள் முன்னிலையாகி இருந்தனர்.
டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 6 மணி நேரம் முன்
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
முதலாளிகளாகும் அதிர்ஷ்டம் கொண்டவர்கள் இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தானாம்... ஏன்னு தெரியுமா? Manithan
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
விரைவில் முடிவுக்கு வரும் பூங்காற்று திரும்புமா சீரியலின் கிளைமேக்ஸ் காட்சியின் போட்டோஸ்... Cineulagam