மருமகனின் தாக்குதலுக்கு இலக்கான மாமனார் உயிரிழப்பு
வவுனியா(Vavuniya), மதுரா நகர் பகுதியில் தாக்குதலுக்கு இலக்கான நபரெருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று (06.05.2024) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இச்சம்பவத்தில் மதுராநகர் பகுதியைச் சேர்ந்த மோகன்(45) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மதுரா நகர் பகுதியில் வசிக்கும் உயிரிழந்த நபரின் மருமகனே தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கருத்து முரண்பாடு
வவுனியா, மதுராநகர் பகுதியில் வசிக்கும் குறித்த இருவருக்கும் இடையில் நீண்ட நாட்களாக கருத்து முரண்பாடுகள் இருந்து வந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் வெளியில் சென்றுவிட்டு மாலை வீடு திரும்பிய மாமனார் மீதே மருமகன் காேடரியால் தாக்கியுள்ளார்.
இதில் படுகாயமடைந்த நபரை, உறவினர்கள் வவுனியா வைத்தியசாகை்கு காெண்டுசெல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் சிதம்பரபுரம் பாெலிஸார் விசாரணைகளை மேற்காெண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan
