நாட்டின் பல பகுதிகளிலும் நடமாடும் வன்முறைகளில் ஈடுபடுவதற்கான பயிற்சி பெற்ற இளைஞர், யுவதிகள்
நாட்டில் தற்கொலை குண்டு தாக்குதல்களை மேற்கொண்டு இறந்தவர்கள் தவிர ஏனைய அனைவரும் நாட்டின் பல பகுதிகளிலும் நடமாடிக் கொண்டிருப்பதாக அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார்.
அத்துடன் எஞ்சியோரில் மிகக் குறுகியளவானோரே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொரளையிலுள்ள பேராயர் இல்லத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில், தௌஹித் ஜமாஅத் உள்ளிட்ட 15 அடிப்படைவாத அமைப்புக்களில் சுமார் 350 இஸ்லாமிய இளைஞர், யுவதிகள் அடிப்படைவாத, வன்முறைகளில் ஈடுபடுவதற்கான பயிற்சியைப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் இவர்களில், தற்கொலை குண்டுத்தாக்குதல்களை மேற்கொண்டு இறந்தவர்கள் தவிர ஏனைய அனைவரும் நாட்டின் பல பகுதிகளிலும் நடமாடிக் கொண்டிருக்கின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,