றொரன்டோவில் பாதையோரத்தில் நின்றிருந்த நபருக்கு ஏற்பட்ட விபரீதம்
கனடா - றொரன்டோவில் பாதையோரத்தில் நின்றிருந்த நபர் ஒருவர் வாகனத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
டன்போர்த் மற்றும் சிடார்வெல் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நடைபாதைக்கு அருகாமையில் நின்று கொண்டிருந்த நபர் ஒருவர் மீது வாகனம் மோதுண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வாகனமொன்றில் பயணம் செய்த நபரொருவர் இந்த விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வாகன விபத்தில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்த ஏதேனும் தகவல்கள் இருந்தால் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் பொதுமக்களிடம் பொலிஸார் உதவி கோரியுள்ளனர்.
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! விரட்டி விரட்டி வெட்டிய கும்பல் Manithan
மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள் Manithan