திருகோணமலையில் 3வது நாளாக தொடர்கிறது சாகும்வரை உண்ணாவிரதம்
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் கோரிக்கைகளை சர்வதேசம் கவனத்தில் கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, கையளிக்கப்பட்டு வலிந்து காணாமலாக்கப்பட்டோர் சங்கத்தின் திருகோணமலை மாவட்ட தலைவி நா. ஆஷா மற்றும் இரா.கோசலாதேவி இருவரும் இன்று 3வது நாளாகவும் திருகோணமலை சிவன் ஆலய முன்றலில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இது குறித்து திருகோணமலை மாவட்ட தலைவி நா. ஆஷா கருத்து தெரிவிக்கையில்,
இலங்கை அரசாங்கத்தினூடாக எவ்வித தீர்வும் கிடைக்கப் பெறாமையினாலேயே எமது போராட்டங்களை நாங்கள் சர்வதேசத்தை நோக்கி நகர்த்தியிருக்கின்றோம்.
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி பெண்கள் எத்தனையோ பேர் கண்ணீருடன் வீதியில் போராடிக் கொண்டிருக்கின்றார்கள்.
அவர்களின் கோரிக்கைகளை சர்வதேசம் கவனமெடுத்து செயற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
அமெரிக்கா கனடாவின் கூட்டாளர் அல்ல... ரஷ்யாவைவிட மிகப்பெரிய அச்சுறுத்தல்: ஆய்வு முடிவுகள் News Lankasri