ராமேஸ்வர கடற்தொழிலாளர்களால் முன்னெடுக்கப்படவுள்ள உண்ணாவிரத போராட்டம்
எல்லை தாண்டி கடற்தொழில் ஈடுபட்டதாக ராமேஸ்வரத்தை சேர்ந்த ஐந்து படகையும் அதிலிருந்த 37 கடற்தொழிலாளர்களையும் இலங்கை கடற்படை கைது செய்ததை கண்டித்தும் கடற்தொழிலாளர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் ராமேஸ்வர கடற்தொழிலாளர்களால் உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த போராட்டமானது எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் மண்டபம் தொடருந்து நிலையத்திலிருந்து புறப்படும் சென்னை தொடருந்தை மறித்து போராட்டம் நடத்த கடற்தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
அவசர ஆலோசனை கூட்டம்
மேலும், நவம்பர் 6ஆம் திகதி திங்கட்கிழமை காலை முதல் கடற்தொழிலாளர்களை விடுதலை செய்யும் வரை தொடர்ந்து கடற்தொழிலாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாகவும், இன்றிலிருந்து தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக ராமேஸ்வரம் கடற்தொழில் துறைமுகத்தில் கடற்தொழிலாளர்கள் நடத்திய அவசர ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

மற்றொரு ஐரோப்பிய நாடு... 10,000 ரஷ்ய வீரர்கள்: பிரதமர் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீதா, அருணை கண்டதும் முத்து செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam

மணிக்கு 12,300 கிமீக்கு மேல் வேகம்.., ரஷ்யாவின் RS-26 Oreshnik ஹைப்பர்சோனிக் ஏவுகணையின் விவரம் News Lankasri
