கிழக்கு மாகாணத்தில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி
கிழக்கு மாகாணத்தில் கோவிட் நோயாளர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் குறைந்து வருகின்றது.
மாகாணத்தில் கடந்த ஒரு வாரத்திற்குள் மிகக் குறைந்த கோவிட் நோயாளர்களாக 595 நபர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், 21 மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி வைத்தியர் ஏ.ஆர்.எம். தௌபீக் தெரிவித்துள்ளார்.
பணிப்பாளரை இன்றைய தினம் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் இது வரை 1,618,699 கோவிட் -19 தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.
முதலாவது தடுப்பூசி 874,447 பேருக்கும், இரண்டாவது தடுப்பூசி 744,252 பேருக்கும் ஏற்றப்பட்டுள்ளது.
20 தொடக்கம் 29 வயதுக்கு உட்பட்டவர்கள் 284,990 பேருக்கும், 30 தொடக்கம் 59 வயதுக்கு உட்பட்டவர்கள் 629,933 பேருக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 138,417 பேருக்கும் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சக்திக்கு வைத்த செக், தர்ஷனுக்கு ஷாக் கொடுத்த குணசேகரன்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
 
    
    77 பந்தில் சதமடித்த 22 வயது வீராங்கனை! உலகக்கிண்ண அரையிறுதியில் சாதனை..திணறும் இந்திய அணி News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        