பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக்கொள்வோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி
கோவிட் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக்கொள்வோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார மேம்பாட்டுப் பிரிவின் பணிப்பாளர் டொக்டர் ரஞ்சித் பட்டுவந்துதாவ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
பண்டிகைக் காலம் என்பதனால் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக்கொள்வோர் எண்ணிக்கையில் வீழ்ச்சியை அவதானிக்க முடிகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒமிக்ரோன் திரிபின் பாதிப்புக்கள் ஒப்பீட்டளவில் குறைவானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டெல்டா திரிபினால் ஏற்படும் தாக்கங்களை விடவும் ஒமிக்ரோன் திரிபின் தாக்கங்கள் குறைவானது என அவர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களுக்கு ஒமிக்ரோன் திரிபு தாக்கினால் அந்தளவிற்கு பாதிப்பு ஏற்படுவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பண்டிகைக் காலம் என்பதனாலும், தடுப்பூசி ஏற்றியதும் கைகளில் ஏற்படும் வலி காரணமாகவும் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக்கொள்வோரின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது என டொக்டர் பட்டுவந்துதாவ தெரிவித்துள்ளார்.

நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
