50000 ரூபா மானியம் குறித்த செய்தி: பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்
அரசாங்கத்தால் நிதி மானியங்கள் வழங்கப்படுவதாக கூறி நிதி மோசடி இடம்பெறுவதாக கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழுவின் (CERT) சிரேஷ்ட பொறியியலாளர் சாருகா தமுனுபொல கூறியுள்ளார்.
அது குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மக்களின் முறைப்பாடுகள்
இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,
50000 ரூபா மானியம் வழங்குவதாக உறுதியளிக்கும் போலி செய்திகளைப் பெறுவது குறித்து, பொதுமக்களிடமிருந்து பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

இவ்வாறான செய்திகளில் உள்ள எந்தவொரு இணைப்புகளையும் கிளிக் செய்வதைத் தவிர்க்கவும்.
இந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதையும் தவிர்க்கவும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Spider-Man: Brand New Day முதல் நாளில் இந்தியாவில் மட்டுமே செய்துள்ள வசூல்... மாஸ் கலெக்ஷன் Cineulagam
ஸ்பெயினில் இருந்து மொராக்கோவிற்கு திரும்பிய 37,500 அகதிகள்: பலி எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு News Lankasri