பணம் செலுத்தியதாக போலி பற்றுச்சீட்டுக்கள்: வர்த்தகர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Colombo Sri Lanka Police Investigation Crime
By Laksi Jul 05, 2025 01:54 PM GMT
Report

கையடக்க தொலைபேசி மூலம் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களுக்கு பணம் செலுத்தப்பட்டதாக போலி பற்றுச்சீட்டுக்களை வழங்கி இலட்சக்கணக்கில் நிதி மோசடியில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடக குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முறைப்பாட்டின் பிரகாரம், இவர் பிரபல அரசியல்வாதியின் சகோதரர் என போலி முகம் காட்டி , ரூபா 85,000 மதிப்புள்ள நாய்க் குட்டியை வாங்கி, உரிமையாளருக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட பணத்தைச் செலுத்தவில்லை என தெரியவந்துள்ளது.

செம்மணியில் வரலாற்று சாதனை படைத்த நீதிபதி இளஞ்செழியன்

செம்மணியில் வரலாற்று சாதனை படைத்த நீதிபதி இளஞ்செழியன்

போலி பற்றுச்சீட்டுக்கள்

சந்தேக நபர், உரிமையாளரின் கையடக்க தொலைபேசிக்கு பணம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக பற்றுச்சீட்டு ஒன்றை அனுப்பியதாக முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

பணம் செலுத்தியதாக போலி பற்றுச்சீட்டுக்கள்: வர்த்தகர்களுக்கு முக்கிய அறிவிப்பு | Fake Invoices Warning To Traders

பணம் செலுத்தியதாக நம்பி, உரிமையாளர் தனது சொந்த செலவில் இரத்தினபுரியிலிருந்து சந்தேக நபரின் முகவரிக்கு முச்சக்கர வண்டியில் நாய்க் குட்டியை அனுப்பியுள்ளார். இருப்பினும், அதற்கான பற்றுச்சீட்டு போலியானது என்பது பின்னர் தெரியவந்துள்ளது.

விசாரணைகளுக்குப் பின், சந்தேக நபர் கொழும்பில் கைது செய்யப்பட்டார்.

இன்று முதல் நடைமுறைக்கு வரும் தீர்மானம்! மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

இன்று முதல் நடைமுறைக்கு வரும் தீர்மானம்! மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

விளக்கமறியல்

மேலும் விசாரணைகளில் சந்தேக நபர், இதேபோன்ற பற்றுச்சீட்டுகளை பயன்படுத்தி நாவல பகுதியில் உள்ள ஒரு இறைச்சிக் கடையிலிருந்து  31,187 ரூபா க்கு பொருட்களை பெற்றுள்ளார்.

பணம் செலுத்தியதாக போலி பற்றுச்சீட்டுக்கள்: வர்த்தகர்களுக்கு முக்கிய அறிவிப்பு | Fake Invoices Warning To Traders

மேலும், அவர் 200,000 ரூபா மதிப்புள்ள தொலைக்காட்சியையும் மோசடியாகப் பெற்றுள்ளார்.

சந்தேக நபர் நீண்ட காலமாக சுமார் ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான கேக்குகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களைப் பெறுவதற்கு இதே முறையை கையாண்டுள்ளார்.

சந்தேக நபர் அளுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் ஜூலை 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள்

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலாப் பயணிகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US