விமான நிலைய தாக்குதல் குறித்த போலி மின்னஞ்சல்! கமால் குணரட்ன விளக்கம்
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக அனுப்பி வைக்கப்பட்ட மின்னஞ்சல் போலியானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் குணரட்ன இந்த விடயத்தை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே மக்கள் எந்தவிதமான அச்சத்தையும் ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தாக்குதல் அச்சுறுத்தல் குறித்த மின்னஞ்சல் காரணமாக விமான நிலையத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் குறித்த அச்சுறுத்தல் மின்னஞ்சல் போலியானது என பாதுகாப்புச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.