இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அரசு நிறுவனங்களின் சின்னங்களை பயன்படுத்தி போலியான வேலை வெற்றிட தகவல்களை சமூக ஊடகங்களில் பரப்பி, தனிப்பட்ட தரவுகளைத் திருடும் மோசடி குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில நாட்களில் இதுபோன்ற பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மத்திய வங்கியின் சின்னங்களை பயன்படுத்தி மோசடியான விளம்பரம் ஒன்று தற்போது சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருவதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
போலியான விளம்பரம்
விளம்பரங்களை வேலைவாய்ப்புகளை வழங்குவதாக கூறி வெளியிடப்பட்டதாகவும், அது ஒரு போலியான விளம்பரம் எனவும் இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், சமீபத்திய நாட்களில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் சின்னங்களை பயன்படுத்தி இதேபோன்ற வேலை வெற்றிட விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
போலி வலைத்தளங்கள்
அரசின் சின்னங்களை பயன்படுத்தி வெளியிடப்படும் போலி விளம்பரங்களுக்கு இவ்வாறு பதிலளிப்பது பொருத்தமற்றது என சாருக தமுனுபொல குறிப்பிட்டுள்ளார்.
போலி வலைத்தளங்கள் பெரும்பாலும் உங்கள் தேசிய அடையாள அட்டையின் நகல்கள், கடவுச்சீட்டின் நகல்கள் மற்றும் பிறப்புச் சான்றிதழ்கள் போன்ற தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
எந்த சூழ்நிலையிலும் அத்தகைய வலைத்தளங்களைப் பார்வையிட்டு உங்கள் தனிப்பட்ட தகவல்களை வழங்கக்கூடாது என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.