அவுஸ்திரேலியாவில் வயதான புலம்பெயர்ந்தோருக்கான நடவடிக்கை - இலங்கையர்களுக்கும் வாய்ப்பு
அவுஸ்திரேலியாவில் வயதான புலம்பெயர்ந்தோரின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்துவதற்காக உள்துறை அமைச்சு ஒரு புதிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது.
வயதான புலம்பெயர்ந்தோரின் ஆங்கில அறிவை மேம்படுத்தும் நோக்கில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத் திறன்களை மேம்படுத்த ஆர்வமுள்ள வயதான புலம்பெயர்ந்தோரின் சமூகங்கள் பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கில அறிவு
இந்த திட்டத்தில் 13 சேவை வழங்குநர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாடு முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய 300 இடங்களை அடிப்படையாகக் கொண்டு வகுப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையை சேர்ந்த வயதான புலம்பெயர்ந்தோரும் இதற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாகும்.
இது குறித்த மேலதிக தகவல்களை உள்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் பெறலாம்.
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
ஹார்முஸ் ஜலசந்தியை உடனடியாக திறக்காவிட்டால்.,ஈரானுக்கு 48 மணி நேரம் கெடு விதித்த டிரம்ப் News Lankasri