மீண்டும் ஒரு முடக்க நிலை அபாயம் ஏற்படும் : யாழ். மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை(Video)
அனைத்து செயற்பாடுகளும் வழமைக்குத் திரும்பியுள்ள நிலையில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவிடத்து மீண்டும் ஒரு முடக்க நிலையை நோக்கிச் செல்ல வேண்டிய அபாயம் ஏற்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் வைத்து இன்றையதினம் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ் மாவட்ட சுகாதார மேம்பாட்டுக் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. இதன்போது கோவிட், டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய் பரவலைத் தடுப்பது பற்றியும் ஆராயப்பட்டது. யாழ் மாவட்டத்தில் இதுவரை 19,062 பேர் கோவிட் தொற்றாளர்களாகவும் 502 இறப்புக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது 35 குடும்பங்கள் சுய தனிமைப்படுத்தலில் உள்ளனர். தடுப்பூசியைப் பொறுத்தவரை 30 வயதுக்கு மேல் 309,839 பேரும் 29 தொடக்கம் 20 வயதுடையவர்களில் 56000 பேரும் 12 தொடக்கம் 19 வயதுடையவர்களில் 57265 பேரும் முதலாவது டோசை பெற்றுள்ளனர். பூஸ்டர் தடுப்பூசி என்பதை 88,800 பேர் பெற்றுள்ளனர்.
முதலாம், இரண்டாம் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டவர்கள், பூஸ்டர் தடுப்பூசியைக் கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும். 30 வீதமானவர்களே பூஸ்டர் தடுப்பூசியை இதுவரை பெற்றுள்ளனர்.
ஒமிக்ரோன் திரிபு தற்போது பரவிவரும் நிலையில் யாழ் மாவட்டத்திலும் அது பரவுவதற்கான நிலைகள் காணப்படுகிறது. இந்த சூழ்நிலையில் பூஸ்டர் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்வது அவசியம்.
இதற்கமைய, எதிர்வரும் 31 ஆம் திகதி முதல், பூஸ்டர் தடுப்பூசி வாரம்
பிரகடனப்படுத்தவுள்ளோம்.
பாடசாலை, போக்குவரத்து உட்பட அனைத்து செயற்பாடுகளும் வழமைக்குத் திரும்பியுள்ள
நிலையில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவிடத்து மீண்டும் ஒரு முடக்க
நிலையை நோக்கிச் செல்ல வேண்டிய அபாயம் ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
மரண வீட்டில் அரசியல்.. 2 நாட்கள் முன்
ஜனனி சொன்ன விஷயம், குணசேகரனுக்கு எதிராக விசாலாட்சி இதை செய்வாரா?... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
விஜயா செய்த கேவலமான வேலை, ஆத்திரத்தில் அடிக்க சென்ற அண்ணாமலை.. சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ Cineulagam
இந்தியாவுக்கு வரும் புடின்: விமானத்தில் கொண்டு வரப்பட்ட Aurus Senat கார்! மிரட்டும் தனித்துவம் News Lankasri