ஒரே பாடசாலையில் 71 பாடசாலை மாணவர்களுக்கு கண்பாதிப்பு (Photos)
கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட தருமபுரம் இலக்கம் 1 அ.த.க பாடசாலையில் மேற்கொள்ளப்பட்ட கண் பரிசோதனையில் 71 மாணவர்களுக்குக் கண் பார்வைக் குறைபாடு ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையில் தரம் ஒன்று தொடக்கம் ஐந்து வரையான மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
இந்நிலையில் இவர்களுக்கான கண் பரிசோதனை நேற்றுமுன்தினம் மேற்கொள்ளப்பட்டது.
இப்பாடசாலையில் 370 மாணவர்கள் கல்வி கற்றுவரும் நிலையில், பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நாளன்று 320 மாணவர்கள் சமுகமளித்துள்ளனர்.
இவர்களுக்கான கண் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 71 மாணவர்களுக்குக் கண் பார்வைக்குறைபாடு ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கு அதிக தொலைபேசி பாவனை காரணமாக அமைந்திருக்கலாம் எனவும் வைத்தியர்கள்
தெரிவித்ததை அடுத்து 71 மாணவர்களும் இன்றையதினம் மேலதி்
கண் பரிசோதனைக்காக அழைக்கப்பட்டு அவர்களுக்குக் கண்ணாடி வழங்க நடவடிக்கை
எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது





