கிழக்கில் இயங்கும் தீவிரவாதக் குழு : விசாரணைகள் தீவிரம்
கிழக்கு மாகாணத்தின் கல்முனைப் பகுதியில் இயங்கும் ஒரு தீவிரவாத அமைப்பு குறித்து புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (04) நடைபெற்ற வாராந்த அமைச்சரவை செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர், பாதுகாப்புப் படையினர் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகக் கூறினார்.
பாதுகாப்புப் படையினர் தற்போது விழிப்புடன்..
கிழக்கு மாகாணத்தை தளமாகக் கொண்ட அத்தகைய குழு பற்றிய தகவல்கள் உள்ளன.
மேலும் உளவுத்துறை மற்றும் பாதுகாப்புப் படைகள் அது தொடர்பான விவரங்களை வெளியிட்டு வருகின்றன என்று குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் பாதுகாப்பு தொடர்பான கலந்துரையாடலின் போது இந்த விடயம் தொடர்பில் உரையாற்றியதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இருப்பினும், பாதுகாப்புப் படையினர் தற்போது விழிப்புடன் இருப்பதாகவும், நிலைமையை தீவிரமாக மதிப்பிட்டு வருவதாகவும் அமைச்சர் ஜெயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவு- இதெல்லாம் நடக்க காரணம் இவர்தானா? Manithan
