நீதியரசர்களின் பதவிக்கால நீடிப்பு தொடர்பில் அரசுக்கு எதிர்க்கட்சி நிபந்தனை
"புதிய அரசமைப்பொன்றின் ஊடாகவே நீதியரசர்களின் பதவிக்காலத்தைத் திருத்தம் செய்ய முடியும் அவ்வாறன்றி, தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மாத்திரம் பதவிக்காலத்தை நீட்டிப்பது முறையற்ற செயலாகும் இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
எதிர்க்கட்சி நிபந்தனை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"நீதித்துறையை அரசியல் மயமாக்க இந்த அரசு முயற்சிக்கின்றது. நீதிமன்றக் கட்டமைப்பில் தற்போது தோற்றுவிக்கப்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு ஜனாதிபதியே பொறுப்புக் கூற வேண்டும். கீழ் நீதிமன்றங்களில் வெற்றிடங்கள் நிலவுவதால், உயர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கான நியமனங்களை வழங்க வேண்டிய அவசியமில்லை என ஜனாதிபதி கூறுவது முற்றிலும் தவறானது.
நீதியரசர்களின் நியமனங்களைத் தாமதப்படுத்துவதால், தகுதியுள்ள பல நீதிபதிகளின் பதவி உயர்வுகள் தடுக்கப்படுகின்றன. உயர் நீதிமன்றத்துக்கு நியமனம் பெறும் தகுதியுள்ளவர்கள், மேன்முறையீட்டு நீதிமன்றத்திலேயே ஓய்வுபெறும் துரதிர்ஷ்டவசமான நிலை கடந்த காலங்களிலும் காணப்பட்டது.

தற்போதைய அரசு அரசமைப்புத் திருத்தம் ஒன்றின் மூலம் பிரதம நீதியரசர் மற்றும் நீதியரசர்களின் பதவிக்காலத்தை நீடிக்க முயற்சிக்கின்றது. அதற்கு நாங்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளோம்.
புதிய அரசமைப்பு உருவாக்கத்தின் ஊடாக நீதியரசர்களின் பதவிக்காலத்தை அரசு திருத்தம் செய்வதில் எமக்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லை.
ஆனால், குறிப்பிட்ட சிலரை மட்டும் தெரிவு செய்து, அவர்களின் பதவிக்காலத்தை நீடிப்பது சட்டத்துக்குப் புறம்பான மற்றும் முறையற்ற செயலாகவே அமையும் என குறிப்பிட்டுள்ளார்.
சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்: “ரத்தத்திற்கு ரத்தம்” ஈரானின் விளம்பர பலகையால் வெடித்த சர்ச்சை News Lankasri
ஐரோப்பாவை வாட்டும் வெப்பம்... குரோஷியாவின் கடலடி அருங்காட்சியகத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! Manithan