முள்ளிவாய்க்கால் நினைவுதினம் அனுஸ்டித்த 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு (PHOTOS)
மட்டக்களப்பு – கிரான் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 10 பேரின் விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
கல்குடா பொலிஸாரினால் கடந்த மார்கழி 27ம் திகதி இரு பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்ட வழக்கு இன்று வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம்.பசீல் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்றைய தினம் சந்தேகநபர்கள் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்படாத காரணத்தினால் 12ம் மாதம் 9 திகதி வரை வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.