நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கை! 25.5 பில்லியன் ரூபாவினால் நேசக்கரம் நீட்டும் சீனா
இலங்கைக்கு சுமார் 25.5 பில்லியன் ரூபா நன்கொடை தொகை ஒன்றை வழங்குவதற்கு சீன அரசாங்கம் இணங்கியுள்ளது.
சீன வெளிவிவகார அமைச்சர் வெங் யீயின் இலங்கை விஜயத்தின் போது இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் டுவிட்டர் பதிவொன்றில் இந்த நன்கொடை பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தை புனரமைத்தல், சிறுநீரக நோயாளிகளை கண்டறியக்கூடிய வசதிகளை உடைய நோயாளர் காவு வண்டிகளை அறிமுகம் செய்தல், கொழும்பில் குறைந்த வருமானம் ஈட்டும் 1996 குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மானித்தல் உள்ளிட்ட திட்டங்களை முன்னெடுப்பதற்கு சீனா இணங்கியுள்ளது.
சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டிருந்ததுடன், பிரதமருடன் இருதரப்பு நாடுகளின் அரசியல் விடயங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டிருந்தது.
இதன்போது சுற்றுலாத்துறை, முதலீடுகள், கொரோனா நிவாரண உதவித் திட்டங்கள், கொரோனா வைரஸ் பரவலுக்கு பின்னரான தயார் நிலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், இலங்கையிலுள்ள மருத்துவ மாணவர்களை சீனாவிற்கு அனுப்புகின்றமை குறித்தும் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடும் நெருக்கடியில் இலங்கை! - சீனாவிடம் உதவி கேட்ட கோட்டாபய (பத்திரிக்கை கண்ணோட்டம்) |
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri