புதுக்குடியிருப்பு கொள்ளைச் சம்பவம்: நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு
புதுக்குடியிருப்பில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுப்பட்டு கைதுசெய்யப்பட்ட அறுவரையும் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து திருட வந்த இளைஞர்களை கட்டிவைத்து நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கடந்த நேற்று முன்தினம்(29) இடம்பெற்றுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
இந்த சம்பவத்துடன் கைதுசெய்யப்பட்ட ஆறுபேரையும் நேற்று(30) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் புதுக்குடியிருப்பு பொலிஸார் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
இதன்போது இவர்களை எதிர்வரும் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க மன்று
உத்தரவிட்டுள்ளது.