நீதிபதிகளிடம் வரி அறவிடுவதற்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடை உத்தரவு நீடிப்பு
நீதிபதிகளின் சம்பளத்தில் இருந்து உழைக்கும் போதே அறவிடப்படும் வரியை அறவிடுவதற்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதவான்களின் சம்பளத்திற்கு வரி விதிக்கும் உள்ளூர் வருமான வரி திணைக்களத்தின் தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்தி பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை அடுத்த மாதம் முதலாம் திகதி வரை நீடிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (24.02.2023) உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் சங்கம், நீதிச்சேவை ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் நீதி அமைச்சின் அதிகாரிகள் இணைந்து இந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்வைத்திருந்தனர்.
தடை உத்தரவு நீடிப்பு
இந்த மனு நேற்று (24.02.2023) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு இறைவரி
மனுதாரர்களான நீதிபதிகள் சங்கங்கள், ஒரு சுயேச்சைக் குழுவாக இருப்பதால், அவர்களிடம் வரி வசூலிக்க உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என தெரிவித்துள்ளனர்.
எனவே அவர்களிடமிருந்து உரிய வரியை அறவிட நீதி அமைச்சு எடுத்த தீர்மானத்தை ரத்து செய்யுமாறு கோரி இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri
