நீடிக்கப்பட்டது மின்வெட்டு நேரம்! வெளியானது அறிவிப்பு
நாட்டில் இன்று நடைமுறைப்படுத்தப்படும் மின் துண்டிப்பு நேரத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்படி, P முதல் W வரையான வலயங்களில் இன்று மேலதிகமாக ஒரு மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பாராத மின்சார பாவனை அதிகரிப்பு காரணமாக இவ்வாறு மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்பட்டதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதற்கமைய, குறித்த வலயங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 வரையான காலப்பகுதியினுள் ஒரு மணிநேர மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, P முதல் W வரையான வலயங்களில் மாலை 3 மணி முதல் இரவு 11 மணிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 2 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில், தற்போது மின்துண்டிப்பு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri
