வெள்ளவத்தையில் ஆசிரியை ஒருவரின் மோசமான செயல் அம்பலம்
வெள்ளவத்தையில் மகனின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்பட்ட போதைப்பொருள் விருந்துபசாரம் பொலிஸாரினால் தடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது சர்வதேச பாடசாலை ஒன்றின் ஆசிரியை உட்பட 15 இளைஞர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யபட்டவர்களில் அவரது இரண்டு பிள்ளைகளும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர்கள் கைது செய்யப்படும் போது அவர்களிடமிருந்து ஐஸ், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட ஆசிரியை 42 வயதானவர் என்பதுடன், ஏனையவர்கள் 18-20 வயதுக்குட்பட்டவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த மாணவர்கள் தெஹிவளை மற்றும் வெள்ளவத்தை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam

Numerology : இந்த தேதியில் பிறந்த பெண்ணை திருமணம் செய்தால் ராஜயோகம் உறுதி... நீங்க பிறந்த தேதி? Manithan
