முல்லைத்தீவில் தனியார் காணிலிருந்து வெடிகுண்டு மீட்பு
முல்லைத்தீவு - கொக்குளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியமுனை பகுதியிலுள்ள தனியார் காணியிலிருந்து வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த காணியில் இன்று (21.03.2024) உரிமையாளர் துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது காணியில் வெடிகுண்டு இருந்துள்ளதை கண்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள்
இதனையடுத்து கொக்குளாய் பொலிஸாருக்கு காணியின் உரிமையாளரினால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் வெடிகுண்டினை மீட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |