இடமாற்றம் வழங்கப்படாத உத்தியோகத்தர்கள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை
யாழ்.மாவட்ட செயலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் இடமாற்றம் வழங்கப்படாத உத்தியோகத்தர்களின் பணி இடமாற்றம் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.
யாழ்.மாவட்டத்தில் உள்ள சில பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அலுவலக உதவியாளர்கள் 10 வருடங்களைத் தாண்டியும், அதே பிரதேசங்களில் கடமையாற்றுவதாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு தொடர்பில் இன்று அரச அதிபரிடம் கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
இடமாற்றங்கள் தொடர்பில் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சுற்று நிருபத்திற்கமைவாக உரிய காலப்பகுதியை நிறைவு செய்த உத்தியோகத்தர்கள் பணியிட மாற்றத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
அவ்வாறு விண்ணப்பிக்கும் போது சரியான தகவல்களை வழங்காத பட்சத்தில் இடமாற்றங்கள் சில வேளைகளில் பின் செல்ல வாய்ப்பு உள்ளது.
ஆகவே இடமாற்றங்கள் உரிய காலப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டும். சில தவறுகள்
இருக்கத்தான் செய்கின்ற நிலையில் அது குறித்து ஆராய்ந்து நடவடிக்கை
எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 12 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
