சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவிற்கு செல்ல முற்பட்டவர்களுக்கு விளக்கமறியல்
மட்டக்களப்பிலிருந்து சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரேலியாவிற்கு செல்ல முற்பட்ட 51 பேரை அடுத்த மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.
மட்டக்களப்பு, வாழைச்சேனை, திருகோணமலை மற்றும் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்தவர்களே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு, பாலமீன்மடு கடற்கரையில் இருந்து சட்டவிரோதமான முறையில் அவுஸ்ரோலியாவுக்கு இயந்திரப் படகு ஒன்றில் சென்ற 54 பேரை கிழக்கு கடல் பகுதியில் வைத்து கடற்படையின் கைது செய்து திருகோணமலை கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
மட்டக்களப்பு கிழக்கு கடல் பகுதியில் கடற்படையினர் ரோந்து நடவடிக்கை
கடற்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றிற்கு அமைய மட்டக்களப்பு கிழக்கு கடல் பகுதியில் கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது மட்டக்களப்பு, பாலமீன்முடு கடற்கரையில் இருந்து சிறிய படகுகள் மூலம் கிழக்கு கடலில் தரித்து நின்ற இயந்திர படகிற்கு சட்டவிரோத குடியேற்றகாரர்கள் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து அவுஸ்ரோலியாவுக்கு புறப்பட்டு பிரயாணித்து கொண்டிருந்த இயந்திர படகை கிழக்கு கடலில் வைத்து கடற்படையினர் இடைமறித்து சோதனையிட்ட போது அதில் சட்டவிரோமாக அவுஸ்ரோலியாவுக்கு சென்று கொண்டிருந்த 2 பெண்கள் உட்பட 54 பேரை கைது செய்தனர்.
இவர்கள் பயணித்த படகை கடற்படையினர் இழுத்து கொண்டு திருகோணமலை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று அவர்களிடம் விசாரணைகளை மேற்கோண்ட பின்னர் திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.
இதில் மூவருக்கு பினை வழங்கியதோடு 51 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பின்னர் பொலிஸார் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில்
வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.