270 மில்லியன் ரூபாவிற்கும் அதிக தொகையை செலவு செய்துள்ள முன்னாள் ஜனாதிபதிகள்
முன்னாள் ஜனாதிபதிகள் கடந்த மூன்று வருடங்களில் 27 கோடி(270 மில்லியன்) ரூபாவிற்கும் அதிக தொகையை செலவிட்டுள்ளதாக மத்திய வங்கி பதிவுகள் தெரியவந்துள்ளது.
இதன்படி முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபகச, கோட்டாபய ராஜபக்ச, மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணசிங்க பிரேமதாசவின் மனைவி ஹேமா பிரேமதாச ஆகியோர் மூன்று வருடங்களில் (2022-2024) சுமார் 27 கோடி ரூபாவை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல வெளியிட்ட தகவலின் படி குறித்த செலவினங்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
சுய தேவை
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சுய தேவைக்காக கடந்த 2022ஆம் ஆண்டு செலவிடப்பட்ட தொகை ஏழு கோடி ரூபாய் என பேராசிரியர் விளக்கமளித்துள்ளார்.

மேலும் 2023ஆம் ஆண்டில் எட்டு கோடிக்கும் அதிகமாகவும், இந்த ஆண்டு 11 கோடிக்கும் அதிகமாக செலவீனங்கள் அதிகரித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் முன்னாள் முதல் பெண்மணிகளுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் 45 சதவீதம் தற்போது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சன் டிவியிடம் வேண்டுகோள் வைக்கும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்கள்... என்ன தெரியுமா? Cineulagam
ஈரான் தாக்குதலுக்கு பிரிட்டிஷ் இராணுவ தளம் பயன்படுத்தப்படாது! தெளிவுபடுத்திய பிரித்தானிய அரசு News Lankasri