ஜனாதிபதி தேர்தலில் வாக்காளர்களுக்கான செலவில் கட்டுப்பாடு
நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தின்படி ஒவ்வொரு வாக்காளரின் பிரசாரத்திற்கும் தேர்தல் ஆணையம் உச்சவரம்பைக் கொண்டு வரவுள்ளது
இதன் காரணமாக, இந்த முறை ஜனாதிபதி வேட்பாளர்களின் ஆடம்பரமான செலவுகளுக்கு தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய ஜனாதிபதித் தேர்தல் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பிரசார நிதிச் சட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படும் முதலாவது தேர்தலாகும்.
செலவிடும் தொகை
இந்தநிலையில், 2024 ஆகஸ்ட் 15 அன்று வேட்புமனுவை ஏற்றுக்கொண்ட பின்னர், வேட்பாளர்கள் எவ்வளவு பணம் செலவழிக்க முடியும் என்பது அனைத்து போட்டியாளர்களுடனும் கலந்தாலோசித்து தீர்மானிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு உள்ளூராட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, ஒரு வாக்காளருக்கு 20 ரூபாய்களையே வேட்பாளர் ஒருவர் செலவிட முடியும் என்று தீர்மானிக்கப்பட்டது.என்றாலும் அந்த தேர்தல் நடத்தப்படவில்லை.
ஜனாதிபதி தேர்தலைப் பொறுத்த வரையில், வாக்காளர் ஒருவருக்கு செலவிடும் தொகை அதிகமாக இருக்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan
