விசாரணைகளுக்கு உட்படுத்தப்படாது நாடு கடத்தப்பட்ட மத போதகர்கள்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடந்த பின்னர், இலங்கையில் தங்கியிருந்த ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் செயற்பாட்டாளர்கள் மற்றும் அடிப்படைவாத இஸ்லாமிய மத போதகர்கள் என 50 பேர் எவ்வித விசாரணைகளுக்கும் உட்படுத்தப்படாது நாடு கடத்தப்பட்டுள்ளதாகச் சிங்கள பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஈஸ்டர் தாக்குதலில் வெளிநாடுகளில் தொடர்புகள் பற்றிக் கண்டறிய அரசாங்கம் 5 நாடுகளின் உதவியைக் கோரியுள்ளது.
அரசாங்கம், ஈராக், துருக்கி, சிரியா, எகிப்து மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளிடமே இந்த உதவியைக் கோரியுள்ளது.
இந்த நிலையில், இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்ட அடிப்படைவாதிகள் வெளிநாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த சிங்கள பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.