வலிமையான பெண்களுக்கு வலுவூட்டும் கரங்கள் - கண்காட்சி
பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகின்ற போது தான் மாவட்டத்தில் கானப்படுகின்ற போசாக்கு குறைபாட்டை நிவர்த்தி செய்ய முடியும் என கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ் முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்றைய தினம் (13-09-2024) நடைபெற்ற வலிமையான பெண்களுக்கு வலுவூட்டும் கரங்கள் எனும் தொணி பொருளில் மேற்கொள்ளப்பட்ட கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை கூறியுள்ளார்.
தொடர்ந்து உரையாற்றுகையில்,
கோவிட் பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி என்பவற்றினால் அனைவருமே பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர். இந்த நிலையில் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மேலும் சவால்களை எதிர்நோக்கி இருந்தன.
பெண் தலைமைத்துவ குடும்பங்கள்
போசாக்கு மட்டத்திலே பின்தங்கிய நிலையில் காணப்படுகின்ற கிளிநொச்சி மாவட்டத்தின் பெண்களின் வாழ்க்கை தரத்தை வாழ்வாதாரத்தை உயர்த்துகின்ற போது தான் போசாக்கினை அபிவிருத்தி செய்ய முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இன்று கிளிநொச்சி பசுமை பூங்காவளாகத்தில் விற்பனை நிகழ்வு நிகழ்வானது, சமத்துவம் மற்றும் நீதிக்கான நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வலிமையான பெண்களுக்கு வலுவூட்டும் கரங்கள் எனும் தொனிப் பொருளிலான கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வில் பச்சிலைப்பள்ளி கரைச்சி பிரதேச செயலர் பிரிவுகளைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் தங்களுடைய உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தி சந்தைப்படுத்தி உள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |