அப்பியாசக் கொப்பிகளின் விலைகள் குறித்து வெளியான தகவல்
அப்பியாசக் கொப்பிகளின் விலைகள் எதிர்காலத்தில் குறையலாம் என அச்சகமொன்றின் முகாமையாளரான தயாநிதி கோகுலன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறிக்கு வழங்கிய விசேட செவ்வியில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், அப்பியாசக் கொப்பிகளின் விலைகள் அண்மைக்காலங்களில் அதிகரித்துள்ளன.
கடதாசி கொள்வனவின் போது ஏற்பட்ட விலை அதிகரிப்பு காரணமாகவே இவ்வாறு அப்பியாசக் கொப்பிகளின் விலைகளும் அதிகரித்துள்ளன.
அப்பியாசக் கொப்பிகளுடன் தொடர்புடைய இரசாயனங்களுக்கு சிறிது காலம் தடை விதிக்கப்பட்டிருந்தது.
எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு பின்னரான காலப்பகுதியில் இந்த விலைகள் குறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.