இலங்கை தொடர்பில் ஆராய உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு
சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு, எதிர்வரும் வாரங்களில் கூடி, இலங்கை தொடர்பில் ஆராயவுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் பணியாளர்களுக்கும், இலங்கை அதிகாரிகளுக்கும் இடையே எட்டப்பட்ட பணியாளர் நிலை ஒப்பந்தத்தை அங்கீகரிப்பது குறித்து இதன்போது தீர்மானிக்கப்படும் என்று நிதியத்தின் பேச்சாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார்.
வோசிங்டனில் நேற்று (23) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
நான்காவது மதிப்பாய்வு
இந்தநிலையில், இலங்கையில், மின்சார செலவு-மீட்பு விலையை மீட்டெடுப்பது மற்றும் மின்சார விலை சரிசெய்தல் பொறிமுறை ஆகியன, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழுவின் ஒப்புதலுக்கு முக்கியமான நிபந்தனைகளாகும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முன்னதாக, 2025 ஏப்ரல் 25 அன்று நாட்டின் பொருளாதாரத் திட்டத்தின் நான்காவது மதிப்பாய்வு குறித்து சர்வதேச நாணய நிதியத்தின்; பணியாளர் நிலை ஒப்பந்தம் எட்டப்பட்டது.
இதன்படி, இந்த ஒப்பந்தம் முறையாக அங்கீகரிக்கப்பட்டதும், இலங்கை அதன் தற்போதைய ஏற்பாட்டின் கீழ், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 334 மில்லியன்; டொலர்களை பெற்றுக்கொள்ளும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
விவாகரத்து வழக்கில் ட்விஸ்ட்.. கண்கலங்கி அழுத ரோகிணி.. அதிர்ச்சியில் மனோஜ், விஜயா! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri