கலால் திணைக்களத்தின் அறிவிப்பு: மதுபிரியர்களுக்கு சோகமான செய்தி
வரவிருக்கும் நத்தார் பண்டிகையின் போது விடுதிகள் மற்றும் உணவகங்கள் ஊடாக மதுபானம் விற்பனை செய்வதற்கு அனுமதிப் பத்திரம் வழங்கப்படவில்லை என கலால் திணைக்கள ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.
சுற்றுலா சபையினால் அங்கீகரிக்கப்பட்ட தங்குமிட வசதிகள் கொண்ட விடுதிகளிலுள்ள வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மாத்திரமே குறித்த தினத்தில் மதுபானம் வழங்குவதற்குக் கடந்த காலங்களில் அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும் சுற்றுலா விடுதிகள் மற்றும் உணவகங்களுக்கு இத்தினத்தில் மதுபானம் வழங்குவதற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ள நிலையிலும் அது தொடர்பாக இதுவரையில் எவ்வித கலந்துரையாடல்களோ, தீர்மானங்களோ எடுக்கவில்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 3 மணி நேரம் முன்
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam