முல்லைத்தீவில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை தேடிய அகழ்வு பணி
யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதங்கள் மறைத்து வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் சுதந்திரபுரம் பகுதியிலுள்ள தனியார் காணியில் இன்றையதினம் (14) காலை அகழ்வு பணிகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.
குறித்த அகழ்வு பணியானது முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.எச்.மஹ்ரூஸ் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றது.
விஷேட அதிரடி படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதியின் உத்தரவின் பேரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், புதுக்குடியிருப்பு பொலிஸார் இணைந்து அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றது.
அகழ்வு பணிகள்
பைக்கோ இயந்திரத்தின் உதவியுடன் நிலத்தில் அகழ்வு பணிகள் இடம்பெற்று வருகின்றது.

தற்போது அகழ்வு இடம்பெறும் பகுதியில் 2021 ஆம் ஆண்டு அகழ்வு இடம்பெற்று எதுவும் கிடைக்காத நிலையில் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 19 மணி நேரம் முன்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam