தமிழர் பகுதியில் மற்றுமொரு அகழ்வாராய்ச்சி நடவடிக்கை-செய்திகளின் தொகுப்பு
திருகோணமலை, திருகோணேஸ்வரம் ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள கடல் பகுதியில் முழுமையான அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டு கடலுக்கு கீழ் உள்ள பழைய தெய்வ திருவுருவச் சிலைகளை அகழ்ந்து எடுக்க எதிர்பார்த்துள்ளதாக புத்தசாசன, சமய விவகாரங்கள் மற்றும் கலாசார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
திருகோணேஸ்வரம் ஆலயம் மற்றும் கோட்டை ஆகிய தொல்லியல் இடங்களை நேற்று பார்வையிட்ட போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,“இந்த நிலப் பகுதி இன்னும் அகழ்வாராய்ச்சிக்கு உட்படுத்தப்படவில்லை. அருகில் உள்ள கடலிலும் அகழ்வாராய்ச்சிகள் நடத்தப்படவில்லை. அவற்றில் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
திருகோணேஸ்வரம் ஆலயத்தின் ஒரு பகுதி கடலில் இருப்பதாக நாம் அறிந்த தகவல் இருக்கின்றது.
இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளின் போது கடலுக்குள் தெய்வ திருவுருவச் சிலைகள் போன்றவை இருப்பதாக அறிய கிடைத்துள்ளது.
கடலுக்குள் இருக்கும் தொல்பொருட்கள் மற்றும் தெய்வ திருவுருவச் சிலைகளை அகழ்ந்து மீட்டெடுக்கும் வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க எண்ணியுள்ளேன்.”என கூறியுள்ளார்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றை நாளுக்கான செய்திகளின் தொகுப்பு,
ஜெயிலர் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா.. விஜய்யை தொடர்ந்து ரஜினி செய்யப்போகும் பிரம்மாண்ட விஷயம் Cineulagam
ஹார்முஸ் நீரிணையில் ட்ரம்ப் அறிவித்த 20 சதவீத கட்டணம்., உலக எண்ணெய் வர்த்தகத்தில் அதிரடி மாற்றம் News Lankasri