மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் வரலாற்று சாதனை
மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்றில் முதற் தடவையாக ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் அதிக புள்ளியினை பெற்று மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி மாணவன் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
கார்த்தீபன் தீபிஷன் என்ற மாணவனே 184 புள்ளிகளை பெற்று இவ்வாறு கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இரண்டாம் இடம்
மேலும் பாடசாலை மட்டத்தில் 177 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தை பிரசாத் சேஷ்விண்டிடஸ் என்ற மாணவர் பெற்றுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வெட்டுப்புள்ளியாக 145 புள்ளிகள் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், குறித்த பாடசாலையில் 40 மாணவர்கள் சித்திபெற்றுள்ளனர்.