தாய்லாந்து பறந்தார் மைத்திரி
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena), 09 பேர் கொண்ட குழுவுடன் தாய்லாந்திற்கு (Thailand) விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார்.
தாய்லாந்திலுள்ள பாங்காக் (Bangkok) நகரை நோக்கி குறித்த குழுவுடன் இன்று (09.04.2024) அதிகாலை12.55 மணியளவில் விஜயத்தினை அவர் ஆரம்பித்துள்ளார்.
எனினும், அவரின் பயண நோக்கம் தெரியவில்லை.
திடீர் விஜயம்
அண்மையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி தொடர்பில் தமக்கு தெரியும் என கூறியிருந்ததுடன் கடந்த சில வாரங்களாக இலங்கையில் பரபரப்பினை ஏற்படுத்தியிருந்தார்.

மேலும், அவரின் பங்கேற்பு இல்லாமல், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அரசியல் பீடம் கூட்டப்பட்டு, கட்சியின் பதில் தலைவராக, அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையிலேயே, அவர் தற்போது தாய்லாந்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
அமெரிக்காவின் ஈரான் மீதான அழித்தொழிப்பு: யுத்தம் நிறைவடைந்து விட்டதா..! 22 மணி நேரம் முன்
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam