வீடுகளை ஒப்படைக்காமல் வெளிநாடுகளுக்கு சென்றுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர்களின் குடியிருப்புகளை வழங்காமல் 5 முன்னாள் உறுப்பினர்கள் வெளிநாட்டில் தங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக வீடுகளை பொறுப்பெடுக்கும் நாடாளுமன்ற அதிகாரிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
சுமார் 80 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. 20 உறுப்பினர்களின் வீடுகள் மட்டுமே ஒப்படைக்கப்பட உள்ளதாக நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அரசாங்க வீடுகள்
உடனடியாக வீடுகளை ஒப்படைக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரிகள் நினைவூட்டல் கடிதங்களை அனுப்பியுள்ளனர்.

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாதிவெல வீடுகள் வழங்கும் நடவடிக்கை அடுத்த மாதம் முன்னெடுக்கப்படவுள்ளது.
சுமார் 40 புதிய உறுப்பினர்கள் வீடுகள் வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக நாடாளுமன்ற அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 19 மணி நேரம் முன்
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri
இது மட்டும் நடந்தால் கதையே மாறிடும்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 நடிகர் கதை பற்ற போட்ட பதிவு வைரல் Cineulagam