முன்னாள் போராளிகளை அரசியல் பகடைகாய்களாக பாவிக்க முனைவதாக குறிப்பிட்டு எழுந்துள்ள கண்டனம்
முன்னாள் போராளிகளை அரசியல் பகடைகாய்களாக பாவிக்க முனைவதை அரசியல் கைதிகளை விடுதலைக்காக தேசிய அமைப்பு வன்மையாக கண்டிப்பதாக சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவரால் இன்று (08.04.2026) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எழும் சந்தேகம்
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அரசியல் நிலை தளம்பலில் தள்ளாடும் தமிழரசு கட்சி சிங்கள பௌத்த பேரினமாக அரசியலுக்கு முண்டு கொடுத்து அதனை முன்னெடுக்கவும், சுகபோக பதவி அரசியலை தொடரவும், தமிழர்களின் தேச மற்றும் தேசிய அரசியலை கழுத்து நெரித்து கொலை செய்யவும், முன்னாள் போராளிகளை அரசியல் பகடைகாய்களாக பாவிக்க முனைவதை அரசியல் கைதிகளை விடுதலைக்காக தேசிய அமைப்பு வன்மையாக கண்டிப்பதோடு முன்னாள் போராளிகள் இதற்கு எந்த வகையிலும் பலிகாடாவாகிவிடக் கூடாது என்றும் இது தொடர்பில் தமிழ் தேசப்பற்றாளர் விழிப்புடன் செயல்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றது.

இன்று விடுதலை போராட்டத்தையும் மாவீரர்கள் அவர்களின் தியாகங்களையும் புகழ்பவர்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல், இனப்படுகொலை தின நிகழ்வு நினைவு நாள்கள், மாவீரர் தினம் என்பவற்றை கட்சியாக நினைவு கூர்ந்ததுண்டா?
நாட்டின் சுதந்திர தினத்தினை தமிழர் தேசம் கரி நாளாக நினைவு கூற இவர்கள் அமைதி காப்பது நாம் அறிவோம்.இப்போது முன்னாள் போராளிகளுக்கு அழைப்பு கொடுப்பது பலத்த சந்தேகத்தை தோற்றுவிக்கின்றது.
இன்று தனது கட்சியினதும் சுயநல தேவைக்காகவும் விடுதலைப் போராட்டத்தையும் போராளிகளையும் புகழ்பாடும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் அன்று சிங்கள ஊடகங்களும் ஒன்றுக்கு விடுதலைப் போராட்டத்தையும் போராளிகளின் செயற்பாட்டையும் இகழ்ந்து வண்மத்தோடு பேசியதை எவரும் மறந்திருக்க மாட்டார்கள். ஆனால் இன்று அவர் புகழ் பாடுவது அரசியல் நரித்தனத்துடன் என்பதை எவரும் அறிவர்.
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri