கௌதாரிமுனை பகுதியில் மாவீரர்களது பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு
கிளிநொச்சி பூநகரி பிரதேசத்துக்கு உட்பட்ட கௌதாரி முனை பகுதியில் மாவீரர்களது பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு இன்று(22-11-2025) நடைபெற்றுள்ளது.
மிகவும் பின்தங்கிய போக்குவரத்துவசதிகளேஇல்லாத பிரதேசமாக உள்ள கௌதாரி முனை பகுதியில் 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இன்றுவரை மாவீரர் பெற்றோர்களை கௌரவிப்பதோ அல்லது மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு சென்று தங்களுடைய பிள்ளைகளுக்கான அஞ்சலிகளை செலுத்துவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்படாமலும் போக்குவரத்து வசதிகள் இன்றி காணப்பட்ட மாவீர்ர்களின் பெற்றோர்கள் முன்னாள் கரைச்சி பிரதேச சபை உறுப்பினரான சண்முகராஜா ஜீவ ராஜாவின் ஏற்பாட்டில் மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளித்ததுடன் அவர்களுக்கு உடுபுடவைகளையும் பயன் தரும் மரக்கன்றுகளையும் வழங்கி மதிப்பளித்துள்ளார்.