இரு வாரங்களில் டெல்டா உச்சமடையும்!! வைத்தியர் ருவன் ஜயசூரிய ஆருடம் - செய்திகளின் தொகுப்பு
இலங்கையில் டெல்டா தொற்றினால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் இருக்கின்ற 16 பேரது மாதிரிகள் கொழும்பு ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திலுள்ள ஆய்வுகூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் டெல்டா திரிபடைந்த தொற்று பரவும் ஆபத்து தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது. கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களிலிருந்து இந்தத் தொற்று தற்போது யாழ்ப்பாணம், கிளிநொச்சி பிரதேசங்களிலும் பரவலடையும் ஆபத்து தலைதூக்கியுள்ளது.
இந்த நிலையில் டெல்டா தொற்று ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்ற 16 பேரது மாதிரிகள் கொழும்பு - ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திலுள்ள கோவிட் ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,