புத்தபெருமானால் கூட இலங்கையை முன்கொண்டு செல்லமுடியாது: நாடாளுமன்றில் ஒலித்த குரல்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாடாளுமன்றத்தில் நேற்று நிகழ்த்திய உரையில் இனப்பிரச்சினை தொடர்பில் எவ்வித தீர்வுகளையும் முன்வைக்கவில்லை என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 1948, 72 மற்றும் 78களில் இலங்கையில் கொண்டு வரப்பட்ட அரசியல் அமைப்பு மாற்றங்களை நிராகரித்த தமிழ் மக்கள், சமஸ்டி தீர்வைக்கோரியே போராடி வருகின்றனர்.
இந்தநிலையில் 1980 முதல் மேற்கொள்ளப்பட்ட தமிழ் மக்கள் மீதான இன அழிப்பில் ஜனாதிபதிக்கும் பங்குண்டு என்று கஜேந்திரன் குறிப்பிட்டார்.
இலங்கையில் சுயநிர்ணயத்தை வலியுறுத்தி தமிழர்களின் போராட்டத்தை மறைத்து வெறும் பொருளாதார பிரச்சினை மாத்திரமே நாட்டில் இருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டதாக கஜேந்திரன் குற்றம் சுமத்தினார்.
தமிழ் மக்களுக்கான தீர்வை 13 திருத்தத்தின்கீ்ழ் முடக்கிவிட முடியாது. வடக்கின் மயிலிட்டி இன்று தமிழர்களிடம் இருந்து பறிக்கப்பட்டு சிங்களவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.
மயிலந்தமடு சிங்களவர்கள் வசமாக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வைக்காணாது, புத்தபெருமானாலோ அல்லது கோட்டாபயவினாலோ, முன்னேற்றப் பாதையி்ல் அழைத்துச்செல்லமுடியாது என்றும் கஜேந்திரன் தெரிவித்தார்.