ஆயுத உற்பத்தியில் வல்லரசாகும் ஐரோப்பா : ஏற்றுமதியில் புதிய சாதனை
முடிவில்லாத உக்ரைன் போரின் விளைவாக ஐரோப்பா ஆயுத இறக்குமதியில் அதிக கவனம் செலுத்தி வரும் அதேவேளையில், ஒரு வளர்ந்து வரும் ஆயுத உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாகவும் (Arms Powerhouse) உருவெடுத்து வருவதாக ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் (2021-25), அதற்கு முந்தைய காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் ஐரோப்பிய நாடுகளின் ஆயுத இறக்குமதி மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
உலகளாவிய ஆயுத ஏற்றுமதியில்
இதில் சுமார் 48 சதவீத ஆயுதங்கள் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக உக்ரைனின் பாதுகாப்புத் தேவைகளே இந்த இறக்குமதி அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இருப்பினும், இறக்குமதிகளுக்கு மத்தியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) ஆயுத ஏற்றுமதி 36 சதவீதம் உயர்ந்துள்ளது.

இது அமெரிக்கா மற்றும் சீனாவின் வளர்ச்சி விகிதத்தை விட அதிகமாகும். உலகளாவிய ஆயுத ஏற்றுமதியில் ஐரோப்பிய ஒன்றியம் தற்போது 28 சதவீத பங்கைக் கொண்டுள்ளது.
இது ரஷ்யாவின் ஏற்றுமதி அளவை விட நான்கு மடங்கும், சீனாவின் அளவை விட ஐந்து மடங்கும் அதிகமாகும். மறுபுறம், போரில் ஈடுபட்டுள்ள ரஷ்யாவின் ஆயுத ஏற்றுமதி 64 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.
பில்லியன் கணக்கான யூரோக்கள் முதலீடு
ரஷ்ய ஆயுதங்களின் தரம் குறித்த சந்தேகம் மற்றும் அதன் உள்நாட்டுத் தேவைகளே இந்த வீழ்ச்சிக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
அமெரிக்காவின் அரசியல் மாற்றங்கள் மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்கள் மீதான நம்பகத்தன்மை குறைந்து வருவதால், ஐரோப்பிய நாடுகள் தங்களின் சொந்த ஆயுத உற்பத்தியை அதிகரிக்கவும், பிற ஐரோப்பிய நாடுகளிடமிருந்து ஆயுதங்களைக் கொள்முதல் செய்யவும் முன்னுரிமை அளித்து வருகின்றன.

ஐரோப்பிய ஒன்றியம் இதற்காக 'பாதுகாப்பான ஐரோப்பா' (SAFE) போன்ற கடன் திட்டங்கள் மூலம் பில்லியன் கணக்கான யூரோக்களை முதலீடு செய்துள்ளது.
ரஷ்யா மற்றும் மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, ஐரோப்பா இனி வரும் காலங்களில் அமெரிக்காவைச் சார்ந்திருப்பதை முற்றாகக் குறைத்து, ஒரு தன்னாட்சி பெற்ற ஆயுத வல்லரசாக மாற முயற்சி எடுத்து வருவதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
சுரேஸ் சலேவின் உடலில் சித்திரவதைக்குள்ளாகியுள்ள அறிகுறிகள் ..! சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை
சிஐடியில் திடீரென மனம் மாறிய சுரேஷ் சலே..! பின்னணியில் கோட்டாபயவின் பயணத்தடை - கலக்கத்தில் அரசியல்வாதிகள்
21 நாட்களுக்கு முன்னர் கிடைத்த இரகசிய தகவல்! உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச எச்சரிக்கை..
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri