இலங்கை குறித்து அதிருப்தியை வெளியிடவுள்ள ஐரோப்பிய ஒன்றியம்
இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் இந்த மாத இறுதியில் நடைபெறும் கூட்டு ஆணையக் கூட்டத்தில் தமது அதிருப்தியை வெளியிடவுள்ளது.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நினைவுத்தூபி அழிக்கப்பட்டமை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் தமது கவலையை இந்தக்கூட்டத்தில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிறுபான்மையினரின் பிரச்சனைகள் மற்றும் நல்லிணக்கம் போன்றவை தொடர்பில் இந்தக்கூட்டத்தில ஐரோப்பிய ஒன்றியம் கருத்துக்களை வெளியிடும். இரு தரப்பு உயர் அதிகாரிகளின் பங்களிப்புடன் இந்த மாத இறுதியில் இந்த கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று ஐரோப்பிய ஒன்றிய தரப்புக்கள் தெரிவித்தன.
அடுத்த மாதம் ஆரம்பமாகும் ஜெனீவா மனித உரிமைகள் பேரவை அமர்வுக்கு முன்னதாக இந்த சந்திப்பு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.