எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்வு! ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள் விடுத்துள்ள கோரிக்கை
ஈரான் போர் காரணமாக சர்வதேச சந்தையில் எரிபொருள் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், அதிக இலாபம் ஈட்டும் எரிசக்தி நிறுவனங்களுக்குக் கூடுதல் வரி (windfall tax) விதிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) ஐந்து முக்கிய நாடுகளின் நிதி அமைச்சர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், போர்த்துக்கல் மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளின் நிதி அமைச்சர்கள் இணைந்து ஐரோப்பிய ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில்,
போர்க்களத்தில் களமிறக்கப்படும் அதி சக்திவாய்ந்த வான் பாதுகாப்பு அமைப்பு! ஈரானின் எச்சரிக்கையினால் மீண்டும் பதற்றம்
போரினால் விளையும் இலாபம்
போரினால் விளையும் இலாபத்தைப் பயன்படுத்துபவர்கள் பொதுமக்களின் சுமையைக் குறைக்கத் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தரப்பில் ஈரானின் மீது கடந்த பெப்ரவரி 28 அன்று தொடங்கிய தாக்குதலுக்குப் பிறகு, ஐரோப்பிய எரிவாயு விலைகள் 70 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளதால், இது 2022இல் ரஷ்யா-உக்ரைன் போரின்போது ஏற்பட்டதைப் போன்றதொரு எரிசக்தி நெருக்கடியை ஐரோப்பாவில் உருவாக்கியுள்ளது.
இந்தக் கடிதத்தில், தற்போதைய சந்தை ஏற்றத்தாழ்வுகளைக் கருத்தில் கொண்டு, 2022ஆம் ஆண்டில் எரிசக்தி நெருக்கடியைக் கையாள அமுல்படுத்தப்பட்ட அவசர வரி விதிப்பு முறையைப் போன்று, ஐரோப்பிய ஒன்றியம் தழுவிய ஒரு வலுவான சட்டபூர்வமான வரி கருவியை ஆணையம் விரைந்து உருவாக்க வேண்டும் என்று அமைச்சர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும், இந்த வரி விதிப்பு எவ்வளவு சதவீதமாக இருக்க வேண்டும் அல்லது எந்தெந்த நிறுவனங்களைக் குறிவைக்க வேண்டும் என்ற கூடுதல் விவரங்கள் அந்தக் கடிதத்தில் இடம்பெறவில்லை.
ஐரோப்பாவின் எரிசக்தி இறக்குமதி
ஐரோப்பாவின் எரிசக்தி தேவைகளுக்கு இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருட்களையே பெரிதும் நம்பியிருப்பதால், மத்திய கிழக்கு மோதல்கள் உலகளாவிய விலையில் நேரடி பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் எரிசக்தி ஆணையர் டான் ஜோர்கென்சன் இது குறித்துக் கூறுகையில்,

குறிப்பாக ஜெட் எரிபொருள் மற்றும் டீசல் போன்ற சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலியப் பொருட்களின் விநியோகம் குறித்து பிரஸ்ஸல்ஸ் கவலையடைந்துள்ளது என்று தெரிவித்தார்.
2022இல் அறிமுகப்படுத்தப்பட்ட எரிவாயு விலை உச்ச வரம்பு மற்றும் எரிசக்தி நிறுவனங்களின் உபரி இலாபத்தின் மீதான வரி போன்ற அவசரக் கால நடவடிக்கைகளை மீண்டும் கொண்டுவருவது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் மூலம் போரினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் நிதிச் சுமையைக் குறைக்கவும், சந்தையில் நிலவும் நிச்சயமற்ற தன்மையைக் கட்டுப்படுத்தவும் முடியும் என உறுப்பு நாடுகள் நம்புகின்றன.
தீவிரமடையும் வான்வழி தாக்குதலினால் நடுவானில் சுட்டுவீழ்த்தப்படும் ஏவுகணைகள் - அபுதாபியில் பற்றியெரியும் ஆலை
மூன்று நாட்களுக்கான உணவை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
ரூ. 4000 கோடி பட்ஜெட் இராமாயணம் படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் வாங்கும் சம்பளம்... இத்தனை கோடியா, அடேங்கப்பா... Cineulagam