சமகால அரசிலும் தொடரும் நெருக்கடி - கடும் ஆதங்கத்தில் நாட்டு மக்கள்
அரசாங்கம் மின்சார கட்டணத்தை 20 முதல் 30 சதவீதம் வரை குறைத்திருந்தாலும், அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் பிற பொருட்களின் விலைகளைக் குறைக்க நடவடிக்கை எடுக்காததால், தாம் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாக நுகர்வோர் சுட்டிக்காட்டுகின்றனர்.
மின்சாரக் கட்டணங்கள் கணிசமாக குறைக்கப்பட்ட போதிலும், பல நுகர்வோர் பொருட்களின் விலைகள் இன்னும் அப்படியே இருப்பதாக ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.
மின்சாரக் கட்டணத்தை குறைப்பதற்கு ஈடாக, நுகர்வோர் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்த அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என நுகர்வோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
வாழ்க்கைச் செலவு
நுகர்வோர் பொருட்களின் விலைகள் குறைக்கப்படாமையினால் வாழ்க்கைச் செலவு இன்னும் கடுமையாகிவிட்டதாக மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் வீட்டு நுகர்வோருக்கான மின் கட்டணம் 20 சதவீதமும், தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் 30 சதவீதமும் குறைக்கப்பட்டது.
பொதுப் பயன்பாட்டு ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri