வெளியானது அத்தியாவசிய பொருட்களின் விலைப்பட்டியல்
நாட்டில் அரிசி மற்றும் மரக்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைப்பட்டியலை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி நிலையம் மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் வழங்கியுள்ள குறித்த விலைப்பட்டியலை அரசாங்க தகவல் திணைக்களம் அங்கீகரித்து வெளியிட்டுள்ளது.
கடும் மழையின் தாக்கம்
அண்மைக்காலமாக பெய்த கடும் மழையின் தாக்கம் காரணமாக விவசாய செய்கை நிலங்கள் பாதிப்படைந்துள்ள நிலையில் மரக்கறி விலையில் பாரிய அதிகரிப்பு காணப்படுகின்றது.
குறிப்பாக மலைநாட்டில் உற்பத்தி செய்யப்படும் போஞ்சி, கரட், முட்டை கோவா உள்ளிட்ட மேலும் பல மரக்கறிகளும் பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி உள்ளிட்டவற்றின் விலையும் சடுதியாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் 07 ஆம் மற்றும் 08 ஆம் திகதிகளில் புறக்கோட்டை பொது சந்தை உள்ளிட்ட பிரதான சந்தைகளில் விற்பனை செய்யப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறித்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
